பகவான் யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமமகா கும்பாபிஷேக நிறைவு விழா
ADDED :3778 days ago
திருக்கோவிலுார்:திருவண்ணாமலை பகவான் யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தின் மகா கும்பாபிஷேக பதினொன்றாம் ஆண்டு நிறைவு விழா, வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.25ம் தேதி காலை 6:30 மணிக்கு அதிஷ்டானத்தில் அபிஷேகம், மகா தீபாராதனை, 10:45 மணிக்கு யோகிராம்சுரத்குமார் மகராஜ் சுவாமிகளுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.மாலை 4:30 மணிக்கு மயிலை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 6:15 மணிக்கு சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.26ம் தேதி காலை 7:00 மணிக்கு அதிஷ்டானத்தில் மூலவருக்கு மகா அபிஷேகம், 10:30 மணிக்கு பக்தர்கள் பஜனை, 11:00 மணிக்கு சோடசோபவுபசார தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஜி.ஏ.துருவ நாராயணன் பாடல்கள், இரவு 8:00 மணிக்கு பகவானின் வெள்ளி ரதத்தில் பவனி, ஆரத்தி நடக்கிறது.