திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா:4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில்,
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை
தரிசித்தனர்.
சிறப்பு அபிஷேகம்திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று, கிருத்திகை விழாவை
முன்னிட்டு, அதிகாலை, 4:45 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம்
போன்ற அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர
ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 10:30 மணிக்கு, மலைக்
கோவிலில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 70 ஆயிரம் பக்தர்கள்இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நான்கு மணி நேரம் பொது வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து,மூலவரை வழிபட்டனர்.