கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத பஜனைகள்!
ADDED :3773 days ago
செஞ்சி:செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத சிறப்பு பஜனை நடந்தது.
சாமிக்கண்ணு திருமால் வணக்கம் செய்தார்.கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி
துரை ரங்கராமானுஜம் முன்னிலை வகித்தார். ஜெயராமன், ராமமூர்த்தி, ஜனார்த்தனன் ஆகியோர் சொற்பொழிவு நடத்தினர். சுந்தர ராமானுஜம், ஜானகிராமன், எட்டியாபிள்ளை சிறப்புரை நிகழ்த்தினர். உபயதாரர்கள் ரமணி, கவிதா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுதர்சனம் நன்றி கூறினார்.
சிறப்பு பஜனையில் நடுப்பட்டு புருஷேத்தமன் வில்லுப்பாட்டு குழுவினரும், செஞ்சி சத்ய சாயி சேவா சமிதியினர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் கலந்து
கொண்டனர்.