விழுப்புரம் பக்தர்கள் குழு பாதயாத்திரை!
ADDED :3768 days ago
விழுப்புரம்: பஞ்சமாதேவி கிராம பக்தர்கள் குழுவினர், திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
வளவனூர் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இருந்து ஜானகிராமன் பாகவதர் தலைமையில் தென்பாண்டியன்,ஸ்ரீராம், சுப்புராமன், கண்ணன் உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.