முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :3757 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த எஸ்.எஸ்.ஆர்., பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி பிற்பகல் 1.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சாகை வார்த்து படையலிட்டனர் . இரவு அம்மன்வண்ணவிளக்கு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.