பூஜை சாமான்களை வெள்ளிப்பொருட்களாகப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :3883 days ago
நமக்கு வளமான வாழ்வு அருளும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதே பூஜையின் நோக்கம். அதனால், எந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் பூஜை செய்ய முடியுமோ, அந்த நிலையில் வழிபாட்டை மேற்கொள்கிறோம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது என்ற அடிப்படையில், மண், பாத்திரம், செம்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.