முகாசபரூர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!
ADDED :3762 days ago
மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு திருமஞ்சனத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ம ங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் கடந்த 23ம் தேதி முதல் ஆன்மிக நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் (24ம் தேதி) காலை 7:30 மணிக்கு திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (25ம் தேதி) காலை 8:30 மணிக்கு சிறப்பு திரு மஞ்சனம், மாலை 7:00 மணிக்கு பஜனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.