திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்
ADDED :3763 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று காலை 10:00 மணிஅளவில், குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர், சிவா விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.