யானையில் முருகன்!
ADDED :3911 days ago
காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் வழியிலுள்ள கிராமம் மாகறல். இங்குள்ள மாகறலீஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதி எதிர்புறமுள்ள முருகன், யானை மீது அமர்ந்திருப்பதைக் காணலாம். மயிலை வாகனமாகக் கொண்ட முருகன், தன் அண்ணனான விநாயகரின் மீது ஏறி அமர்ந்து விளையாடுவதை நினைவூட்டும் வகையில், இங்கு யானை மீது இருப்பது சிறப்பாகும்.