திருத்தணி அம்மன் கோவிலில் அய்யப்பனுக்கு மலர் பூஜை!
ADDED :3823 days ago
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, மலர் பூஜையை ஒட்டி, அய்யப்பனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, அய்யப்ப சுவாமி மலர் பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில், யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை அய்யப்பனுக்கு பால், தயிர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின், அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தன. இந்த விழாவில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.