பழநி ரோப்கார் நாளை நிறுத்தம்!
ADDED :3959 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் இயக்கப் படுகிறது. நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
அதன்பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடைக் கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். ரோப்கார் ஜூலை 15 முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.