உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பசாமி தோத்திரம்!

கருப்பசாமி தோத்திரம்!

1. ஆரார் புரிந்தபிழை ஆனாலும் அன்பரைக்கண்
பாரா திருப்பதுண்டோ? பாடிப்பணியும் என்னை
நேரா எழுந்தருளி நெஞ்சுவந்து ரட்சிப்பாய்!
காரார் திருமேனிக் கடவுள் கருப்பண்ணனே!

2. ஆருக்கு வந்த விருந்தோ என்றகலாமல்
பேருக்கு ஒருகுறையும் வாராது பேணியருள்!
ஊருக்கு மன்னவனாய் உறங்காப் புளியிருக்கும்
பாருக்குள் கண்கண்ட பகவான் கருப்பண்ணனே!

3. பாய்மரத்தில் காகம் பறந்து திரும்பி அந்தப்
பாய்மரமே தேடிவந்து படிவதுபோல், என்ஐயா
தாயகமாய் உன்னைச் சரணடைந்தேன்! சரணடைந்தேன்
சேயென்னைக் காப்பாய்நீ தேவா, கருப்பண்ணனே!

4. ஐயைந்து திங்கள் அருமையுள்ள கோசலையின்
தெய்வ வயிற்றினிலே சோயாய்க் கிடந்தவனே!
மெய்யாய்ச் சனகனது வில்வளைத்துச் சீதைதனைக்
கையால் அணைத்தவனே! காவாய், கருப்பண்ணனே!

5. முந்தி அயோத்திவிட்டு முனிவனவன் பின்சென்று
விந்தையாய்த் தாடகையை வில்லால் முடித்தவனே!
மந்திரமா வேள்வி வகையாகக் காத்தருளும்
கந்துகமே! என்னை நீ காவாய் கருப்பண்ணனே!

6. அண்டாத பேயும் அடங்காத வினைசூதும்
ஒண்டவரும் போதில் உனையே நினைத்திடுவேன்!
கொண்டாடும் என்னைக் குதித்துவந்து ஆதரிப்பாய்
தண்டாயுதம் கொண்ட சாமீ கருப்பண்ணனே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !