உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்

திருத்தணி :சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று, ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அதிகாலை, 5:00 மணிக்கு, யாகசாலையில், ஐந்து கலசங்கள் வைத்து, சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !