திருவாடானை மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!
ADDED :3736 days ago
திருவாடானை: திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் விழா ஜூலை 14ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி நேற்று காலை நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவில் கலை நிகழ்ச்சிகளும், அம்மன் வீதி உலாவும் நடந்தது.