வடமதுரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்
ADDED :3783 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு திருக்கல்யாணம் நடக்கிறது. கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று வட மதுரை சி.ஏ.வி., காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் இ.என்.பழனிச்சாமியின் ஆறாம் நாள் மண்டகப்படியில், யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. வண்ணமிகு வாணவேடிக்கையுடன், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் தாயார் சன்னதியில் இன்றிரவு நடக்கிறது. ஜூலை 31ல் தேதி தேரோட்டமும், ஆக.2ல் வசந்தம் முத்துபல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் செய்து வருகின்றனர்.