உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சிறுபாக்கம் மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா!

அச்சிறுபாக்கம் மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா!

காஞ்சிபுரம்: அச்சிறுபாக்கம் அடுத்த தேன்பாக்கம், மதுரா அண்ணா நகர் கிராமத்தில், மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா இன்று   நடைபெறுகிறது.  இதை தொடர்ந்து, இன்று காலை, 11:00 மணியளவில், அம்மனுக்கு குங்கும அர்ச்சனையும், அதை தொடர்ந்து, அம்மன்   கரகத்துடன் வீதியுலா நடைபெறும்.மாலை, 4:00 மணியளவில், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்; 6:00 மணியளவில் அம்மனுக்கு   சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு 7:30 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !