விருதுநகரில் கஞ்சி கலய ஊர்வலம்!
ADDED :3898 days ago
விருதுநகர்: விருதுநகர் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. சொக்கநாத சுவாமி கோயிலில் துவங்கிய ஊர்வலத்திற்கு வழிபாட்டு மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செவ்வாடை அணிந்த 1,800 பெண்பக்தர்கள் கஞ்சி கலயம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலைப்பேட்டை தெருவிலுள்ள வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தனர்.