திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா!
ADDED :3895 days ago
திருவேடகம்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆக. 31ல் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெற்றது. ஏழவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆவணிமூல உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏடு எதிரேறிய திருவிழாவில் திருப்பாசுர ஏடுடன் திருஞானசம்பந்தர் சப்பரத்தில் வலம் வந்தார். தமிழகத்தில் இங்கு மட்டும் இவ்விழா நடக்கிறது.