சத்தியம் இது சத்தியம்
ADDED :3809 days ago
நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் குறியீடு. ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை அவர் ஏந்தியுள்ள தீ உணர்த்துகிறது. இறைவன் செய்யும் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றில், நெருப்பு அழித்தலைக் குறிக்கும். காட்டை அழிக்கும் நெருப்பு போல, மனதில் இருக்கும் அறியாமை என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை நெருப்பு காட்டுகிறது. கையில் நெருப்பை வைத்துக்கொண்டு ஒருவன் சொன்னால், சொல்வது சத்தியம் என்பர். நடராஜரும் நமக்கொரு சத்தியம் செய்துகொடுக்கிறார். என்னை நம்பி வந்தவர்களை காப்பேன் என்பது தான் அது.