பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.91 கோடி
ADDED :3712 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 28 நாட்களில் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 12 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 1045 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 440 கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட வெளிநாட்டு கரன்சி 1124, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 12 ஆயிரத்து 410 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான முருகன் சிலைகள், பாதம், ஆள் உருவம், கப்பல், வேல், கொலுசு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.