உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த பிரபஞ்சமே சிவமயம் தான்!

இந்த பிரபஞ்சமே சிவமயம் தான்!

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து  என்பது பொருள். பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. பரப்பிரம்மமே (கடவுளே) ஐம்பெரும் பஞ்சபூதங்கள் என்று பிரஸ்ன உபநிஷதம்  கூறுகிறது. இயற்கையே இறைவன் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூ தத்தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை( அக்னி), காளஹஸ்தி  (வாயு), சிதம்பரம்(ஆகாயம்) ஆகிய தலங்களாகும். இதேபோல, சிவபெருமானுக்கு பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்தினசபை,  சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளாக சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !