உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பெருமாள் கோவிலில் பூஜை!

புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பெருமாள் கோவிலில் பூஜை!

ஆனைமலை: ஆனைமலை ரங்கநாதப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜையும், மகா அபிேஷகமும் நடந்தது. ஆனைமலையின் மேற்கு பகுதியில், 200 ஆண்டுகள் பழமையான ரங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதப்பெருமாள் உள்ளார். புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசியில், வைணவ திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனைமலையில் ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், மகா அபிேஷகம், அலங்காரம் நடந்தன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமக்கிருஷ்ணன் மற்றும் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !