விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்!
ADDED :3687 days ago
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், சிமென்ட், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதகூழ் ஆகியவற்றால் 15 அடி உயரம் வரை சுவாமி சிலைகள், பொம்மைகளை தயாரிக்கின்றனர்.இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பந்துலு கூறியதாவது: இந்த ஆண்டு புதிய வடிவங்களில் மீனாட்சி தேர், பாலாம்பிகா தேர், ராமர், சிவன், நரசிம்மர் உட்பட பல்வேறு சிலைகளை செய்துள்ளோம். கூலி ஆட்கள், களிமண் பற்றாக்குறை இருந்தும், கடந்த ஆண்டு விலையிலேயே இந்தாண்டும் விற்கிறோம், என்றார்.