உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா பரத நாட்டியம்!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா பரத நாட்டியம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, பரதநாட்டியம் நடந்தது.  விழாவையெ õட்டி நேற்று முன்தினம், மூலவர் பிரகன்நாயகி அம்பிகைக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர்  சிவானந்தவள்ளி, அம்பிகை சிவனை பூஜை செய்யும் மாவடி சேவை அலங்காரத்தில், கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். திருவண்ணாமலை ஸ்ரீ கலாரத்னா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து லலிதா சகசர நாமார்ச்சனை, சோட சோபவுபசார தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !