பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது எது?
ADDED :3762 days ago
இல்லதென் இல்லவள் மாண்பானாள் உள்ளதென்இல்லவள் மாணாக் கடைஎன்கிறார் தெய்வப்புலவர்.கற்பு என்பதே பெண்கள் அணிய வேண்டிய ஆபரணம். மாண்பு மிக்க கற்பைக் காப்பவள் மனைவியாக வாய்த்து விட்டால், ஒருவனிடம் இல்லாதது என்ன? நெறி தவறிய பெண் மனைவியாகி விட்டால் அவளின்கணவனுக்கு வாழ்வில் இருப்பது தான் என்ன? என்று கேள்விக் கணை தொடுக்கிறார் வள்ளுவர். இன்னும் மேலாக பாரதியார், கற்பு நெறியை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்கிறார். நம்பகத் தன்மையின் ஆணிவேரான கற்பை காக்கும் ஆணும், பெண்ணும் ஆண்டவனுக்குச் சமமானவர்கள்.