உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்!

பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்!

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் 11 நாட்களுக்கு பின் சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை ரோப்கார் இயங்குகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30மணி வரை மட்டும் நிறுத்தப்படும். ரோப்காரில் புதியகம்பி வடக்கயிறு பொருத்தும் பணிக்காக அக்.,31ல் நிறுத்தப்பட்டது. ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்பிவடக் கயிறுபொருத்தப்பட்டு 8 பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. ரோப்கார் கமிட்டி அனுமதியுடன் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. பூஜையில் கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !