உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் துவக்கம்

மதுரை மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோலாட்ட உற்சவம் நேற்று துவங்கியது.இதை முன்னிட்டு இன்று (நவ.,12) முதல் நவ., 15 வரை மாலை 6 மணிக்கு, அம்மன் ஆடி வீதியில் சுற்றி வந்த பின்பு, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ., 16 மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் உலா நடக்கும். நவ., 17ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடக்கும். கந்த சஷ்டி விழா:கோயிலில் சஷ்டி விழா இன்று (நவ., 12) துவங்கி நவ.,17 வரை நடக்கிறது. நவ., 18 காலை 7 மணிக்கு கூடல்குமாரருக்கு (முத்துக்குமார சுவாமி) வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கின்றன. விழாவை முன்னிட்டு இன்று (நவ.,12) முதல் நவ.,18 வரை உபயதாரர்கள் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா சேவைகள் பதிவு செய்து நடத்தப்படமாட்டாது. இத்தகவலை இணை கமிஷனர் நா.நடராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !