புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்!
ADDED :3619 days ago
கடலுார்: கடலுார் அடுத்த புருகீஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி பெருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. கடலுார் அடுத்த புருகீஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் வேல் வாங்கும் வீதியுலா உற்சவம் நடந்தது. நேற்று காலை கந்த சஷ்டி மகா அபிஷேகமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இரவு வீரபாகு துாதும், சூரசம்ஹாரமும் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா வந்தது. இன்று காலை கொடி இறக்கும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணம் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.