முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தினம்
ADDED :3619 days ago
காரைக்குடி,: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்பாள் அவதரித்த 60-வது தினம் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 11 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4.30 மணிக்கு கஞ்சி வழங்குதல் நடந்தது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலாஜி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.