திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்!
ADDED :3772 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது. கோயிலில் காலை 8 மணிக்கு சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருளினார். நவ.,12 முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்தனர். கோயில் கம்பத்தடி மண்டப மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவர் முன், 108 படி அரிசியில் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன்மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது.