உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா

திருக்கோவிலூர்:: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், சூரசம்ஹார விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சன்னதியில் இருந்து வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !