பழநி மலைக்கோயிலில் 25 நாட்களில் ரூ.1.24 கோடி வசூல்!
ADDED :3658 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 25 நாட்களில் ரூ. ஒரு கோடியே 24 லட்சத்து 20 ஆயிரம் வசூலானது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 595 கிராம், வெள்ளி 4 ஆயிரத்து 500 கிராம், வெளிநாட்டு கரன்சி 325 மற்றும் ரொக்கம் ரூ. ஒருகோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 676 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான தொட்டில், முருகன் சிலைகள், கப்பல், வேல் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.