உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகி ராம்சுரத்குமார் 97வது ஆண்டு ஜெயந்தி விழா

பகவான் யோகி ராம்சுரத்குமார் 97வது ஆண்டு ஜெயந்தி விழா

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30ம் தேதி துவங்குகிறது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30 தேதி, டிசம்பர் 1ம் தேதி ஆகிய இரு நாட்களில், ஆஸ்ரம வளாகத்தில் நடக்கிறது. முதல் நாள் (30ம் தேதி) காலை 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம், 10:30 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் பஜனை, 6:15 மணிக்கு பார்த்தசாரதி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது. டிசம்பர் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 11:00 மணிக்கு விழா அரங்கில் சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், மாலை 4:30 மணிக்கு பார்வதி பவுலின் பக்தி பாடல்கள், நடன நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை, இரவு 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆசிரமத் தலைவர் ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !