உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் ராம்சுரத்குமார் மகராஜின் ஜெயந்தி விழா துவக்கம்!

பகவான் ராம்சுரத்குமார் மகராஜின் ஜெயந்தி விழா துவக்கம்!

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 97ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. காலை, 6:30 மணிக்கு பிரதான் மந்திரில், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுவாமியின் மூல மந்திரங்கள், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம், மூலவருக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள், பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலை, 4:30 மணிக்கு பக்தர்களின் பஜனை, 6:15 மணிக்கு பார்த்தசாரதி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான, இன்று காலை, 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது. 11:00 மணிக்கு, விழா அரங்கில் சற்குருநாத ஓதுவாரின் தேவார நிகழ்ச்சி; மாலை, 6:15 மணிக்கு அனுராதா ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை; இரவு, 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !