உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச சக்திமாலை இருமுடி விழா நேற்று துவங்கியது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நடைபெறும். இந்த ஆண்டு, நேற்று துவங்கிய இந்த விழா ஜனவரி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு, தைப்பூச சக்தி மாலை இருமுடி அபிஷேகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அதன்பின், இருமுடி அணிந்து வந்த பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். இருமுடி அணிந்து வரும் பக்தர்களுக்கு, பங்காரு அடிகளார் ஆசி வழங்குகிறார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, ஆதிபராசக்தி சித்தர் பீடம் செய்துள்ளது.ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !