சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை!
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடந்தன. இக்கோவிலில், நேற்றுமுன்தினம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஜென்மா அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு மாலை, 5:00 மணிய ளவில், கலச நீர் வைத்து யாக பூஜை செய்யப்பட்டது. அந்த கலச நீர் மற்றும் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு ÷ பான்றவைகளால் அபிசேக பூஜை நடந்தது. பின், கால பைரவருக்கு, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. சிவலோகநாதர், சிவ லோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து கால பைரவரை வழிப்பட்டனர். அவரது பிறந்த நாள் என்பதால், பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.