உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா!

வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி  தாயார் சமேத வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. கடந்த 6ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு திரு மஞ்சனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தியும், அக்னி பிரதிஷ்டையும் நடந்தது. பின் பவித்ரமாலை  அணிவிக்கப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு கோபூஜையும், மூலவர் பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான்  அலங்காரமும் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு   மகாசாந்தி ஹோமமும், மாலை 6:00 மணிக்கு சுதர்சனஹோமமும் நடந்தது. நேற்று காலை  11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாசாந்தி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12:45 மணிக்கு  மகாபூர்ணாஹூதி நடந்தது.  மதியம் 1:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்வர்ணகவசத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை வலம்  வரச்செய்து, மதியம் 1:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறையும், தீர்த்தபிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகோ பிலமட நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்யநாராயணன், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !