திருவள்ளூரில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்
ADDED :3581 days ago
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள குரு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அதேபோல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவா - விஷ்ணு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.