உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 23வது ஆண்டு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு மங்கள இசையும், 11:00 மணிக்கு சங்கு அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு மகா சங்கல்பமும், தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடந்தன. பிற்பகல் 2: 30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 3 :00 மணிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. மாலை 4: 30 மணிக்கு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. மாலை 5: 30 மணிக்கு மகா தீபாராதனையும், 6 :00 மணிக்கு சாமி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். அறங்காவலர் திருஞானசம்பந்தம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !