உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

புதுச்சேரி: மணவெளி முத்து மாரியம்மன் கோவிலின் திருப்பணிக்காக, 2 லட்சம் ரூபாய் நிதி
வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி கிராமத்தில், முத்து மாரியம்மன், சண்முக விநாயகர்,
திரவுபதியம்மன், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய
முடிவு செய்து, திருப்பணிகள் நடக்கின்றன. மக்கள் இயக்க நிறுவன தலைவர் ஏம்பலம் செல்வம், தனது சொந்த செலவில், திருப்பணி நிதிக்காக, 2 லட்ச ரூபாயை, அறங்காவலர் குழுவினரிடம் வழங்கினார். அறங்காவலர் குழு நிர்வாகிகள் சுரேஷ்குமார், சிவபாலன், பரமகுரு, ரவிச்சந்திரன், வீரப்பன், கஜேந்திரன், தன்ராஜி, ராமஜெயம், பரந்தாமன், கிருஷ்ணன், சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர் ரவி மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராஜகுரு, தண்டபாணி, டி.என்.பாளையம் முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !