உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் மணடலாபிஷேக நிறைவு விழா!

மேல்மலையனூர் அங்காளம்மன் மணடலாபிஷேக நிறைவு விழா!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவை யொட்டி சிறப்பு ஹோமம் நடந்து. மேல்மலைனூர் அ ங்காளம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவ,. 18ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன்  நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை 7:00 மணிக்கு, மண்டலா பிஷேக நிறைவுக்கான சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் இந்து சமய அற நிøலையத்துறை உதவி ஆணையர் நாகபூஷினி, அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம்,  சரவணன், மணி, மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்பத் திருவிழா துவக்கம் மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடல் பெற்ற கோயில் இது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புடையது. இக்கோயிலில் நேற்று (பிப் 20ல்) மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.