ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடு : அறநிலை ஆணையர், கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் தங்கவிமான கோபுரத்திற்கு வரும் 20ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு ஏற்பாடு தீவிரமடைந்துள்ளது. இதை அறநிலையத்துறை ஆணையர், கலெக்டர் நேரில் ஆய்வு செய்தனர். ஜன. ,16 முதல் ஆடிப்பூர கொட்டகையில் யாகசாலை பூஜைகள் துவங்க, 20 காலை 9 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை , மாவட்ட நிர்வாகம் துரிதபடுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தபட்டு, முன்னேற்பாடுகள் செய்வது குறித்து துறைவாரியாக விவாதிக்க பட்டது. விமானகோபுரத்தில் தங்கதகடுகள் பணி முடிவடையும் தருவாயிற்கு வந்துள்ளது. கோயில் மற்றும் அதை சுற்று பகுதிகளில் தூய்மைபணி நடந்து வருகிறது.
சுவாமி தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடும் நிலையில் அவர்கள் கும்பாபிஷேகத்தை இடையூறின்றி காணவும், தங்கவிமானகோபுரத்தை பார்வையிடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
சிறப்பு பஸ்கள்: கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண்பதற்கு நான்கு ரதவீதிகளிலும் எல்.இ.டி., திரை அமைக்கபடுகிறது. நாராயண குருவையா மண்டபம், ஜெயராம் ஷெட், ராமராஜ் திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள், தீயணைப்பு வண்டிகள், தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உட்பட பல அடிப்படை வசதிகள் செய்யபட உள்ளது. இது தொடர்பான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, கலெக்டர் ராஜாராமன் பார்வையிட்டு கும்பாபிஷேக பணிகளை தீவிரபடுத்தினர்.