ஆஞ்சநேயருக்கு 30 ஆயிரம் வடைமாலை
ADDED :3621 days ago
திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவி \லில், அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு, 30 ஆயிரம் வடைமாலை சாற்றப்பட உள்ளது. கடம்பத்துார், திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 9ம் தேதி அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு, 30 ஆயிரம் வடைமாலை சாற்றுதல் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 8:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். பின், அதை தொடர்ந்து, 30 ஆயிரம் வடைமாலை சாற்றுதல் நடைபெறும்.