ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஜ.ஜி., ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பாக தென் மண்டல ஜ.ஜி., முருகன் ஆய்வு நடத்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்கவிமான கோபுர கும்பாபிஷேகம் ஜனவரி 20ம் தேதி காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 16 காலையில் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நேற்று மாலை 5.30 மணிக்கு கோயிலுக்கு வந்த தென் மண்டல ஜ.ஜி. ,முருகன், திருநெல்வேலி போலீஸ் உதவி ஆணையர் ராஜன், விருதுநகர் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர் கும்பாபிஷேகம் நடைபெறும் தங்கவிமான கோபுரம், கோயில் உள் மற்றும் சுற்றுப் பிரகாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின் கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜன், ஹரிஹரன் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு செல்ல "லிப்ட் வசதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் நடைபெற்று மற்ற பணிகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கோயில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.