ஒப்பில்லாமணியன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு!
காரைக்கால்: காரைக்கால் சவுந்தாம்பாள் ஒப்பில்லாமணியன் கோவிலில் மாட்டு பொங்களை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விச்வனாதசுவாமி சுவாமி ஆலயத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோவில் கோசாலையிலுள்ள பசுக்கள் மற்றும் பாரம்பரிய காளைகளுக்கு கோ லட்சுமி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின் கோவிலை சூற்றி காளை மாடு வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது.மேலும் காரைக்கால் வடமறைக்காட்டில் சவுந்தராம்பாள் சமேத ஒப்பில்லாமணியன் கோவிலில் மாட்டு பொங்களை முன்னிட்டு மாலை நந்திகேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகளுடன் நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளாமன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.