உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஜன. 23,24ல் பிராமணர் சங்க மாநாடு

கோவையில் ஜன. 23,24ல் பிராமணர் சங்க மாநாடு

மதுரை: கோவையில் அகில பாரத பிராமணர் சங்கத்தின் இரண்டாவது தேசிய மாநாடு ஜன.,23, 24ல் நடக்கிறது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஞானாம்பிகா மில் சந்திப்பு பி.எம்.என். திருமண மண்டபத்தில் நடக்கும் இம்மாநாட்டிற்கு, தேசிய தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர்கள் நடராஜ், ராமசுந்தரம் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கின்றனர். சிறந்த தேசபக்தரும், குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய பாடுபட்டவரும், தமிழ் பத்திரிகை துறையை தலைநிமிர்ந்து இருக்க செய்த ’தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு நாட்டின் உயரிய விருதான ’பாரத ரத்னா’ விருதும், நாகர்கோவிலில் அவருக்கு மணிமண்டபமும் அமைக்க வேண்டும்.தியாகி வாஞ்சிநாதன் நினைவாக செங்கோட்டையில் இருந்து டில்லிக்கு, விரைவு ரயில் சேவை வசதியை துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிசங்கரர் நினைவு தினத்தை ஆன்மிக தினமாக அனுசரித்து, அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்துறையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி 50 சதவீதம் இடஒக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !