உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. நாளை (ஜன.20) தெப்பத் திருவிழா நடக்கிறது.

சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில், ஜி.எஸ்.டி., ரோடு அருகேயுள்ள தெப்பக்குள கரையில் எழுந்தருளினர். கோயில் சிவாச்சார்யார்கள், யாகம் வளர்த்து பூஜை நடத்தினர். சுத்தியல், அரிவாள், உளி ஆகியவற்றிற்கு தீபாராதனை முடித்து< தெப்பக்குளத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்: 16கால் மண்டபம்முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.

தேர் இழுக்க ஆள் இல்லை:  நடந்த தேரோட்டத்தில் காலை 9.10 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. 20 பேர் மட்டுமே தேரின் வடம்  இழுத்தனர். சுவாமி தரிசனத்திற்கு வந்த, ஐயப்ப பக்தர்களும்  வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !