சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு!
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் மாலை 4.30 மணிக்கு சந்நதி முன்பு உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பொன்னால் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர், ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்தார். பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோயிலை சுற்றி வலம் வந்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆண்டாள் சந்நதி முன்பு அருள்பாலிக்கும் லெட்சுமிநரசிம்மருக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.