பத்ரகாளி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்!
ADDED :3552 days ago
குன்னுார்: பத்ரகாளி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர் வலம் நடந்தது. குன்னுார் அடுத்துள்ள வெலிங்டனில், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணிக்கு மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், கிராம சாந்தி, அஷ்டதிக்பலி, யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை நடந்தது. மதியம், 3:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.