சமயபுரம் மாரியம்மனுக்கு பூஜை
ADDED :3681 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நாமக்கல் மாவட்டம், தர்மரட்சன சமிதி சார்பில் சமயபுரம் மாரியம்மன் உற்சவர் சிலை, அரியாகவுண்டம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஊர் நன்மை, மழை, தொழில் வளர்ச்சி வேண்டி சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாரியம்மன் சிலை வந்த, 12ம் நாளான ஞாயிற்றுக்கிழமை பால் மற்றும் பன்னீர் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபி?ஷக ஆராதனை நடத்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.